இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலிருந்து 79 இளம் கலைஞர்கள் பங்கு பெற்றனர். கருவியிசைப்போட்டியில் ர.கோவிந்தராஜ் (நாதஸ்வரம்), பா.பிரபு (தவில்), ராசுமன் (தவில்) பரதநாட்டியப்போட்டியில் எஸ்,ஸ்ரீநிதி ஐயர், ரெனி,சி, பால், எஸ்.சந்தியா, குரலிசைப்போட்டியில் வி.சரண்யா, ரஞ்சனி, கிராமிய நடனப்போட்டியில் பருமரேசன் (காவடியாட்டம், ரெ ரஜினி (தப்பாட்டம்), இர, ஜான்சி (கரகாட்டம்) ஓவியப்போட்டியில் ரா,ஸ்ரீகாந்த், அ.முரளிகுமார் வெற்றிபெற்றனர். முதல் பரிசு ரூ.5,000 இரண்டாம் பரிசு ரூ.4,500 முன்றாம் பரிசு ஆகியோர் ரூ.3,500 அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது. பங்கு பெற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்ற 5 இளம் கலைஞர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள்.
இப்போட்டிக்கு கிருஷ்ணகிரி மு. திரிவேணி, வே, கல்யாணகுமார், மு. கருணா, வ.சி. சீனிவாசன் மற்றும் மதுரை கோ, செந்தமிழ்செல்வன் ஆகியோர்கள் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். இக்கலைப் போட்டிகளை கலை பண்பாட்டுத்துறை. காஞ்சிபுரம், மண்டல உதவி இயக்குநர் பா,ஹேமநாதன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
No comments:
Post a Comment