திருப்பத்தூர் மாவட்டம் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டமாக இருந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைய போகிறது. அதை ஒட்டி நம்முடைய மாண்புமிகு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் பொதுமக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை இருப்பதாக தெரிகிறது இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தின் பிரதான சாலையான கிருஷ்ணகிரி கூட்ரோட்டில் ஒரு மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு பல மாதங்களாக மூடப்படாமல் உள்ளது.
இந்த சாலை வழியாகத்தான் சேலம், திருவண்ணாமலை, பெங்களூர், தர்மபுரி என்று பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லுகின்ற இந்த சாலை மூடப்படாமல் இருப்பதனால் அதிகமான விபத்துகளும் உயிர் இழப்புகளும் ஏற்படுகின்ற ஆபத்து உள்ளதால் உடனடியாக அந்த பள்ளத்தை மூட வேண்டும் 'என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment