மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 9 June 2022

மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் கைது.

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட் பங்களா மேடு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (27) இவரது மனைவி நந்தினி (23)  இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், விக்னேஷ் தனது குடும்பத்தினருடன் நேற்று நந்தினியின் தாய் வீடான திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  அடுத்த தேவலாபுரம் பகுதியில் நடைபெறும் கெங்கையம்மன் கோவில் திருவிழாவிற்கு  வந்துள்ளார்.


இந்நிலையில் கணவன் மனைவிக்குமிடையே  இன்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ் துப்பட்டாவால் நந்தினியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார், இதில் சம்பவ இடத்திலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உமராபாத் காவல்துறையினர் நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,


இந்நிலையில் விக்னேஷை அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், பின்னர் விக்னேஷை கைது செய்த காவல்துறையினர் அவரை சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அவரிடம் மேலும்  விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.


காதல் திருமணம் செய்து மனைவியை கழுத்தை நெறித்து கணவன் கொலை செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..

No comments:

Post a Comment

Post Top Ad