உத்தர பிரதேச அரசை கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 19 June 2022

உத்தர பிரதேச அரசை கண்டித்து வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திருப்புத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் யோகி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


உத்தர பிரதேச மாநிலத்தில் ஜாவித் அஹமத், ஆப்ரீன் பாத்திமா மீதான போடப்பட்டுள்ள பொய் வழக்கு, கைதையும், சட்ட விரோதமாக அவர்களின் வீட்டை இடித்து, அப்பாவி இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய யோகி அரசை கண்டித்து கண்டன கோஷங்கலை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் முஹம்மத் ஐயூப் தலைமை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad