மேலும் வணிக வளாகத்திற்கு மின் இணைப்பு வேண்டி, நகராட்சி அலுவலகத்தில் வணிக வளாகத்திற்கு சொத்துவரி செலுத்தியதாகவும், மின் இணைப்பு பெற நகராட்சியின் ஆட்சேபனை இல்லை என வாணியம்பாடி நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு போல் போலி கையொழுத்திட்டு போலி ஆவணங்கள் தயாரித்து வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் போலியான சான்றிதழ்களை அளித்துள்ளனர்.
மேலும் இந்நிகழ்வு குறித்து அறிந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையர் ஸ்டான்லி பாபு வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் நகராட்சி ஆணையர் போல் போலி கையொழுத்திட்டு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment