அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா!!! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 26 July 2022

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா!!!

திருப்பத்தூர் மாவட்டம் மடவாளம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 25/072022 இன்று 10&12 -ம் வகுப்பு முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஏணிப்படிகள் அறக்கட்டளையின் சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில், தலைமை ஆசிரியர் திரு. அருள்வியானி  அவர்கள் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உயர்திரு. வில்சன் ராஜசேகர், அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி, மாணவர்களிடையே உரையாற்றும் பொழுது, கடினமாக உழைத்தால் மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என்று  உரையாற்றினார். 

மாவட்ட ஒன்றிய கவுன்சிலர், திரு. சுபாஷ் சந்திரபோஸ், முன்னோடி வங்கி மேலாளர் திரு. அருண்பாண்டியன், AK மோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர், திரு.வேலு, பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன், பெருந்தலைவர் காமராசர் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திரு. ஆனந்தகுமார், பசுமை தாய்நாடு அறக்கட்டளை, திருப்பத்தூர் மாவட்ட பசுமை குழு உறுப்பினர் மு.பெ. சத்யராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர். திரு. சிவலிங்கம், திரு. P.ராஜா உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 


நிகழ்ச்சியினை, ஏணிப்படிகள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திருமாவிமல் அவர்கள் ஒருங்கிணைத்தார். முடிவில் பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர், அஞ்சலி இளவரசன் நன்றி உரையாற்றினார்.

No comments:

Post a Comment

Post Top Ad