ஏற்கனவே நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 114 எக்டர் பரப்பளவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறி கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி முதல் அனைவருக்கும் நோட்டீஸ் கொடுக்கும் பணி துவங்கி அவர்களாகவே அப்புறப்படுத்தி கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரு சாரார் நோட்டீஸ் வாங்க மறுப்பதால் அனைவருக்கும் பொதுவாக ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவிப்பு செய்து நேற்றைய முன்தினம் அனைத்து இடங்களிலும் தகவல் பலகை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ண் உத்தரவின் பெயரில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலை பரபரப்புடனும் பதட்டத்துடனும் காணப்பட்டு வருகிறது
No comments:
Post a Comment