திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்டசெவ்வத்தூர்பகுதியில் கழுத்தை நெறிக்கப்பட்ட நிலையில் மூதாட்டி உயிர் இழப்பு மர்ம நபர்க்கு போலீசார் வளை வீச்சு.
திருப்பத்தூர் மாவட்டம் அடுத்த செவ்வத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி ராம ரோஜா வயது 50 கணவர் மற்றும் பிள்ளைகள் வெளியில் பணிபுரிந்து வருகின்றனர் இந்த நிலையில் இவர் நேற்று இரவு தனியாக வீட்டிற்கு வெளியே தனியாக உறங்கிக் கொண்டிருந்தபோது யாரோ மர்ம நபர் கழுத்தை கம்பியால் நெருக்கி கொண்டு இருந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் இறந்து கிடப்பதை அறிந்து கந்திலி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மிட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர் மேலும் கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
No comments:
Post a Comment