திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் "நம்ம ஊரு சூப்பர்" என்ற சுகாதார முகாம்கள் 20.08.2022 முதல் 02.10.2022வரை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு அமர் குஹ்வாஹா இ,ஆ,ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வளர்மதி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திரு செல்வராசு, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) திருமதி உமா மகேஸ்வரி,மாவட்ட ஆட்சியின் நேர்முக உதவியாளர் திரு வில்சன் இராஜசேகர்,வருவாய் கோட்டாச்சியாளர்கள் திருமதி லட்சுமி, செல்வி பிரேமலதா, தனித்துறை ஆட்சியர் (ச,பா,தி) திரு கிருஷ்ண மூர்த்தி, உதவி ஆணையர் (கலால்) திருமதி பானு,முதன்மை கல்வி அலுவலர் திரு மதன் குமார், இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் திரு மாரிமுத்து,உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) திருமதி விஜயகுமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு பாலாஜி,துணை இயக்குனர் சுகாதார பணிகள் மரு, செந்தில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment