திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைகாலை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறையினர் சார்பில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வாணியம்பாடி சேர்ந்த திரு. ஜெயராமன் என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.00 லட்சம் மதிப்பில்லான நவீன செயற்கை காலான மாவட்ட ஆட்சித் தலைவர் திரு அமர்குஷவாஹா,இ.ஆ.ப அவர்கள் வழங்கி மாற்றுத்திறனாளி நடப்பதை பார்வையிட்டார்.
உடன் தனித்துறை ஆட்சியர் (ச,பா,தி) திரு. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு. பாலாஜி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி .ரேவதி, மற்றும் பலர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment