ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான எரிபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 October 2022

ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான எரிபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி.

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான எரிபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.


திருப்பத்தூர் மாவட்ட அளவிலான எறிப்பந்து போட்டி கேத்தாண்டப்பட்டி திவான் முஹம்மத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று விளையாடினர். இதில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடம் பிடித்து வெற்றிபெற்றனர்.


இதே போல் டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றனர். எரிபந்து மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.


வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் செந்தில்குமார், பள்ளி இயக்குனர் ஷபானா பேகம், முதல்வர் பரிதா,  உடற்கல்வி ஆசிரியர் ராம்குமார் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டினர். 

No comments:

Post a Comment

Post Top Ad

*/