திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் மசாலா கம்பனி டீலரிடம் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரியும் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த திவாகர்.இவர் தனது இருசக்கர வாகனத்தை தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து திவாகர் சி சி டிவி காட்சிகளுடன் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிசிடிவி காட்சிகள் கைப்பற்றியும் போலீசார் இரு சக்கர வாகன திருடர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
No comments:
Post a Comment