வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து.ஒருவர் பலி,6 பேர் படுகாயம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 14 November 2022

வாணியம்பாடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து.ஒருவர் பலி,6 பேர் படுகாயம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பைபாஸ் சாலையில் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு கிராமத்தில் இருந்து மாராப்பட்டு பகுதியில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் வேளை செய்யும் பெண் தொழிலாளர்கள் 6 பேர் ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தனர். ஆட்டோவை வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்த மேகநாதன் (50) என்பவர் ஓட்டி வந்தார்.

ஆட்டோ வாணியம்பாடி பெருமாள் பேட்டை பைபாஸ் சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுனர் மேகநாதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் பலியானார். ஆட்டோவில் பயணம் செய்த பெண் தொழிலாளர்கள் மூன்று பேர் பலத்த காயமும் மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 


காயமடைந்தவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற நகர போலீசார் மேகநாதன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad