திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் மொத்தம் 196 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக மழை நீர் பள்ளி வளாகத்தில் நின்றுதாலும், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் பாதுகாப்பு கருதி வளையம்பட்டு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் சில மாதங்களாக பள்ளி இயங்கி வந்தது.
பாதுகாப்பு கருதி சேதம் அடைந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட கல்வித்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பள்ளி அமைந்துள்ள இடம் அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்பதால் அங்கு மீண்டும் பள்ளி கட்டிடங்கள் கட்ட தடையாக உள்ளது என்று கூறப்படுகிறது.
தற்காலிகமாக பள்ளி இயங்கி வந்த அரசு கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாததால் மீண்டும் பழைய இடத்திலே பள்ளி இயங்க தொடங்கினர்.
பள்ளியில் போதிய வகுப்பறை இல்லாததால் ஒரு வகுப்பறையில் இரண்டு வகுப்பு வெவ்வேற மாணவர்கள் அமர வைத்து ஆசிரியர்கள் தனித்தனியாக பாடம் நடத்தி வருகின்றனர்.
மரத்தடியில் மாணவர்களை உட்கார வைத்து பாடம் நடத்துவதால் மரத்தில் உள்ள பூச்சிகள் மாணவர்கள் மீது அவ்வப்போது விழுந்து மாணவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர் பலமுறை கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இன்று சில மாணவர்களுக்கு பூச்சிகள் கடித்த்தால் அதிகமாக அரிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர், இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் வட்டார கல்வி அலுவலர் சித்ரா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அதிகாரியை முற்றுகையிட்ட பகுதி மக்கள் சம்பவம் குறித்து பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மேலும் பள்ளியின் தலைமை ஆசிரியர் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளதாக உள்ளது. ஆகையால் பள்ளி தலைமை ஆசிரியர் மாற்ற வேண்டும், அதே நேரத்தில் பள்ளி கட்டிடமும் விரைவாக கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்ததின் பெயரில் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சுமார் 2 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
No comments:
Post a Comment