ஆம்பூர் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி சிகிச்சை பார்க்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 December 2022

ஆம்பூர் அரசு மருத்துவமனையில் செக்யூரிட்டி சிகிச்சை பார்க்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இந்த நிலையில் நேற்று இரவு மோதகப்பள்ளி பகுதியை சேர்ந்த ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் சாரங்கபாணி  என்பவர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக வந்துள்ளார்.


அப்போது அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இல்லாததால்  மருத்துவமனையில் காவலராக வேலை பார்க்கக்கூடிய நபர் ஒருவர் சிகிச்சை அளிப்பதும் அதே நேரத்தில் அவருக்கு குளுக்கோஸ் போடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.


இது குறித்து  சாரங்கபாணியின் மனைவி கூறுகையில் :- தனது கணவர் உடல்நிலை குறைவால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து இரண்டு நாட்கள் ஆகியும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் சிகிச்சை அளிக்கவில்லை, உடல்நல பாதிப்பு அதிகமாக உள்ளது என்று செவிலியரிடம் தெரிவித்தால் மாத்திரை அளிக்கிறேன் அதை போடுங்கள் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். 


மேலும் மருத்துவமனையில் காவலராக பணிபுரியும் நபர் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் கொண்டு வந்து சேர்த்து விட்டு அவருக்கு குளுக்கோஸ் செலுத்தி விட்டு தங்களிடம் பணம் கேட்கிறார் என்ற கூறியுள்ளார்.


அரசு மருத்துவமனையில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் யாரும் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதும் சிகிச்சைக்காக வந்த துப்புரவு பணியாளரிடம்  ஸ்டெச்சரில் அழைத்துச் சென்று குளுக்கோஸ் போட மருத்துவமனை காவலர் பணமும் கேட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

*/