கடந்த வருடம் தமிழகத்தில் முதல்முறையாக திருப்பத்தூர் மாவட்டத்தில் துவங்கப்பட்ட இலக்கிய திருவிழா இன்று இரண்டாவது வருடமாக துவக்கி வைக்கப்பட்டது. விழா பேருரை சிறப்பு முறையை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடனம் நடைபெற்றது.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த திருப்பத்தூர் இலக்கிய திருவிழாவில் திரைப்பட இயக்குனர் பா ரஞ்சித்தின் நீளம் பவுண்டேஷன் பெரியார் பதிப்பகம் காக்கைக்கூடு பதிப்பகம் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட பதிப்பகத்தின் மூலமாக புத்தகக் கண்காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற திருப்பத்தூர் இலக்கிய திருவிழாவில் அமைக்கப்பட்ட புத்தக கண்காட்சியில் 70 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஒன்றிய குழு தலைவர் சூரியகுமார் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.
No comments:
Post a Comment