திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தில் மயிலார் பண்டிகையை ஒட்டி எருது விடும் விழா நடைபெறுவது வழக்கம் மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு இல்லை என மூன்று முறை தள்ளி வைத்தனர்.
இதனை கண்டித்து நேற்று கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் வருவாய் துறை பேச்சுவார்த்தைக்குப் பின்பு போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று எருது விடும் விழா நடைபெற்றன இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி, இராணிப்பேட்டை, தர்மபுரி, மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா மாநிலத்தில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றனர்.

மருத்துவர்கள் மாடுகளை பரிசோதனை செய்து பின்னர் வாடிவாசலில் காளைகளை அவிழ்த்து விட வேண்டும் இந்த நிலையில் மாடுகளை துன்புறுத்தும் வகையில் வாலில் கிளிப் கொண்டும் அதே நேரத்தில் வயிற்றினை இறக்கி பிடிக்கும் வகையில் விசுவா கைரியில் போட்டும் மாடுகளை அவிழ்த்து விடப்பட்டன.
அதுமட்டுமின்றி மந்தையில் தேங்காய் நார் இருக்க வேண்டும் எதுவுமில்லாமல் விழா குழுவினர் எருது விடும் திருவிழாவை ஏற்பாடு செய்திருந்தனர். ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் அதனை பின்பற்றாமல் காளைகளை வாடிவாசல் இருந்து விடப்பட்டன குறிப்பிட்ட இலக்கை அதிவேகமாக சென்றடையும் காளையின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக வழங்கப்பட்டது.
இதில் பாதுகாப்பு இல்லாத நிலையில் மந்தையில் காளையின் மீது கை போட முயன்ற 30க்கும் மேற்பட்டோர் மாடு முட்டியதில் படுகாயம் ஏற்பட்டது. எனவே எருது விடும் திருவிழாவில் போதிய பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை பின்பற்றி எருது விடும் விழா நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
- மாவட்ட செய்தியாளர் மோ.அண்ணாமலை.

No comments:
Post a Comment