திருப்பத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கிய நல்லதம்பி MLA. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 28 January 2023

திருப்பத்தூர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கிய நல்லதம்பி MLA.


மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை குறித்து  திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பேசியதுடன் அதற்கான கோரிக்கை மனுக்களை வருவாய்த்துறை அமைச்சரிடம் வழங்கினார். 


அமைச்சர் இந்த கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். 

  1. திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரிசின்‌ இலவச வீட்டு மனை பட்டா வழங்க  ‌வேண்டுவது.
  2. கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம் கிராமத்தில் 500க்கும் மக்களுக்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்க  வேண்டுவது.
  3. திருப்பத்தூர் நகரம் புரவழ்ச்சாலை அமைக்க வருவாய்த்துறை வயிலாக நில எடுப்பு பணி விரைந்து முடிக்க கோருவது.
  4. திருப்பத்தூர் வருவாய் உள்வட்டத்தை இரண்டாக பிரித்து புதிய வருவாய் உள்வட்டம் உருவாக்க கோருவது.
  5. திருப்பத்தூர் தாலுக்காவை இரண்டாக பிரித்து புதிய தாலுக்கா உருவாக்க கோருவது. உள்ளிட்ட பல கோரிக்கைகளை மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் முன்வைத்தார்.

 

- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad