திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் கிழக்கு ஒன்றியம், கொத்தகோட்டை கிராமத்தில் நடைப்பெற்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் நிகழ்ச்சியை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, மாவட்ட துணை கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், மாவட்ட தொண்டரணி து.அமைப்பாளர் எஸ்.ராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment