
இதுகுறித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீவிபத்து குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டதில், ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன் இத்தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த கட்டிடம் மற்றும் இரும்பு பொருட்களை கேஸ் வெல்டிங் வைத்து அகற்றிய போது தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் ஏற்கனவே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 36 கோடி ரூபாய் மதிப்பிலான காலணி உதிரிபாகங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment