தன்னுடைய வார்டு பொதுமக்கள் தன்னிடம் பலமுறை வார்டுக்கு ஏதும் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர் அதனால் பலமுறை திருப்பத்தூர் நகராட்சி நகர மன்ற தலைவரிடமும் கமிஷனர் மற்றும் நகராட்சி திட்ட ஆய்வாளர் கவுசல்யா அவர்கள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இந்த தர்ணா போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தன்னை அவதூறாக பேசும் நகராட்சி திட்ட ஆய்வாளர் கவுசல்யா மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இந்த தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. கமிஷனர் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது இதனால் நகராட்சி பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது. அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment