மொத்தத்தில் தேர்தலுக்காக காத்திருக்கும் மாநிலங்களுக்கான பட்ஜெட்டாகவும் தமிழகத்தை புறக்கணிப்பதற்கான பட்ஜெட்டாகவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலை உரங்களுக்கான விலை குறைவு உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இல்லாமல் ஏமாற்றம் அளிக்கிறது. பாஜக ஆட்சியில் 400 மடங்கு உரங்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் தூத்துக்குடி சம்பவம் குறித்து கூறுகையில் மனிதநேயமற்ற செயல். ஜாதி மதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் செயல்படும் இயக்கங்களையும் கட்சிகளையும் மட்டுமே மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் ஈரோடு கிழக்கு பகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் ஈ வி கே எஸ் இளங்கோவன் பெறுவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது குறித்த பல்வேறு கருத்துகளை கூறினார்.
அப்போது மாவட்ட செயலாளர் கண்ணதாசன் திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சீனி கார்த்திகேயன் அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்தில் அதிபன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment