திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சரியான பகுதியை சேர்ந்த முன்னாள் திமுக பிரமுகர் தட்சிணாமூர்த்தி மற்றும் திமுக முன்னாள் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் காசி தலைமையில் ஜோலார்பேட்டையில் உள்ள ஆர்எஸ் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி முன்னிலையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

அப்போது நிகழ்ச்சியை மேடையில் பேசிய முன்னாள் பத்திர பதிவு அமைச்சர் கே சி வீரமணி தேர்தல் காலத்தில் திமுகவினர் சந்தர்ப்ப சூழ்நிலையாலும் அப்போது பொய் வாக்குறுதிகளையும் கொடுத்து திமுகவினர் வெற்றி பெற்றனர். வேலை திமுகவினர் ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆன நிலையில் மேலும் திமுகவினர் ஆளும் கட்சியாக இருக்கும் போதே ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆன நிலையில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் அவல சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஜோலார்பேட்டை நகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை

No comments:
Post a Comment