திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 February 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.


வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர் N.கண்ணன்.,IPS அவர்களின் உத்தரவின் பேரில் வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர்.M.S முத்துசாமி.,IPS அவர்களின் அறிவுறுத்தலின் படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S. பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின்  வழிகாட்டுதலின் படி போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு வாரம் (TRAFFIC AWARENESS WEEK) இன்று 13.02.2023ம் தேதி முதல் 17.02.2023ம் தேதி வரை கடைபிடிக்கப்பட உள்ளது.
  

மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் விபத்துக்கள் அதிகம்  நடக்கும் இடங்களில் சாலை பாதுகாப்பு விதிகள், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் போதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.கணேஷ் அவர்கள் பொதுமக்களுக்கு  மாணவர்களுக்கும்  வாகன பேரணி நடத்தி முக்கிய இடங்களில்  போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். 

   

வாணியம்பாடி உட்கோட்டம்,  நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் திருமதி .சாந்தி, வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் திரு.மஞ்சுநாதன் அவர்கள் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகள் நடத்தியும்,  வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.லட்சுமணன் அவர்கள் மஜ்ஹருஷ் உலூம் உயர் நிலைப்பள்ளி, வாணியம்பாடி.  மாணவர்களுக்கும்  மற்றும்  போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் முக்கிய இடங்களில்  போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.  

   

ஆம்பூர் உட்கோட்ட போக்குவரத்து காவல்  ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆட்டோ ஓட்டுநர்களும் பொதுமக்களுக்கும் முக்கிய இடங்களில்  சாலை போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/