எங்க ரசத்துல கொத்தமல்லி காணோம்! ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 February 2023

எங்க ரசத்துல கொத்தமல்லி காணோம்! ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.


எங்க ரசத்துல கொத்தமல்லி காணோம்! ஆதிதிராவிடர் நலத்துறை அரசினர் மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட போது சமையலறருக்கு டோஸ் விட்ட கலெக்டர்! பகுத்துண்டு பள்ளுயிர் ஓம்புதல் நூளோர்க்கு தொகுத்துவற்றுள் எல்லாம் தலை என்ற திருக்குறளை கூறி மாணவிகளுடன் அமர்ந்து உணவு உண்ட கலெக்டர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆதி திராவிட நலத்துறை அரசினர் மாணவியர் விடுதி அமைந்துள்ளது, இந்த விடுதியில் ஜவ்வாது மலை புதுநாடு பகுதி  கல்கத்தா, பெங்களூர், உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்து 68 மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு புதிதாக கலெக்டராக பொறுப்பேற்ற பாஸ்கர பாண்டியன் பல்வேறு அதிரடி செயல்களில்  செயல்பட்டு வருகிறார், ஆதிதிராவிட நலத்துறை அரசினர் மாணவியர் வீடுதியில் கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவியர்களுக்கு உணவு பரிமாறினார் பின்னர் மாணவியர்ளுடன் அமர்ந்து பகுத்துண்டு பள்ளுயிர்  ஓம்புதல் நூளோர்க்கு தொகுத்துவற்றுள் எல்லாம் தலை என்ற திருக்குறளை உணவு உட்கொண்டார்.


அப்போது கலெக்டர் உட்கொண்ட ரச சாதம் தாளிக்காமலும் கொத்தமல்லி இல்லாமலும் இருந்ததால் சமையலரிடம் ஏன் ரசத்தில் கொத்தமல்லி இல்லை என கேட்டார், அதற்கு அவசர அவசரமாக உணவு செய்ததால் கொத்தமல்லி போடவில்லை என கூறியதால் கடுப்பான கலெக்டர் இதுபோல் நிலை திரும்பவும் நீடிக்கும் என்றால் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டோஸ் விட்டார்.


மேலும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிட நலத்துறை அலுவலர் ஜெயக்குமார், அரசு அதிகாரிகள்  மற்றும் விடுதி காப்பாளர்கள் சமையலற்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன் அண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad

*/