திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் நெக்குந்தி கிராமத்தில் நடைபெறும் எருது விடும் விழா நடைபெறும் இடத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வருவாய்த்துறை காவல்துறை கால்நடை பராமரிப்புத்துறை சுகாதாரத் துறை தீயணைப்பு துறை ஊரக வளர்ச்சித் துறை மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடன் நேரடியாக ஆய்வு செய்து எருது விடும் திருவிழாவை துவக்கி வைத்தார்.

இந்த ஆய்வின்போது திருப்பத்தூர் கோட்டாட்சியர் திருமதி. லட்சுமி காவல்துறை துணை கண்காணிப்பாளர், திரு. சுரேஷ் பாண்டியன் வட்டாட்சியர் திரு. குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துணை வட்டாட்சியர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருமதி .கவிதா தண்டபாணி மற்றும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய குழு உறுப்பினர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment