ஏலகிரி மலை பகுதியில் 73 ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ள நிலத்தை போலி பட்டா மூலம் பதிவு செய்வதை தடுக்க கோரி மனு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 31 March 2023

ஏலகிரி மலை பகுதியில் 73 ஆண்டுகளாக அனுபவத்தில் உள்ள நிலத்தை போலி பட்டா மூலம் பதிவு செய்வதை தடுக்க கோரி மனு.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை அர்த்தனாவூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ள கனியூர் கிராமத்தைச் சார்ந்த  பங்களா ராமன் வாரிசுகளான ராஜம்மாள், கமலா, துரைசாமி,  வெங்கடேசன், குமார் ஆகியோர் அனுபவத்தில் உள்ள ஏலகிரி மலை அத்தனாவூர் சர்வே எண் 346 பட்டா எண் 219 கொண்ட 3.23 ஏக்கர் நிலத்தில் விவசாயம் கடந்த 73 ஆண்டுகளாக  செய்து வருகின்றனர். 

இந்த நிலமானது 1950 ஆம் வருடம்  வெஸ்ஸிபிரவுன் பங்களாவில் வேலை செய்து வந்ததாகவும் அவர்  பங்களா ராமனிடம் வாய்மொழியாக உத்தரவாக நிலத்தை ஒப்படைத்து விட்டு சென்றாதாக கூறப்படுகின்றது அந்த நிலம் பங்களா ராமன் அனுபவத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது


அதன் பிறகு கடந்த 73 ஆண்டுகளாக இதுவரை அவர்களுடைய வாரிசுதாரர்கள் இந்த நிலத்தை உரிமை கோரி வரவில்லை. என்று கூறப்படுகின்றது, ஆனால் அந்த நிலத்திற்கு போலியாக பட்டா தயாரித்து பதிவு செய்ய கோடியூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் நலப் பணியாளர் சிவகுமார் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தனர். 


 அனுபவத்தில் உள்ள நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் விவசாயம் செய்யும் மேற்படி நபர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருவதாகவும் பயமுறுத்தி வருவதாகவும் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் ஜோலார்பேட்டை சார் பதிவாளர் அவர்களிடமும் மனு அளித்தனர்.  


சர்வே எண் 346 பட்டா எண். 219 கொண்ட இந்த விவசாய நிலத்தை யாருக்கும் பதிவு செய்யக்கூடாது எங்களுக்கு மேலும் நிரந்தர பட்டா  வழங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு அளித்தனர். 


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/