திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தனியார் கல்லூரி கலையரங்கம் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கரபாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 11 கல்லூரியை சேர்ந்த சுமார் 1000 மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர். கலந்துக்கொண்ட மாணவ மாணவிகள் தமிழ் புத்தகம் வாசித்தனர்.

இந்த கூட்டத்தில் தமிழ் கலாச்சாரம் பண்பாட்டு பற்றியும் தமிழைப் பற்றிய சிறந்த கருத்துக்களை ஊடகவியலாளர் செந்தில் பேசினார். தமிழ் என்றால் ஒரு திமிர் உலகின் அத்தனை மொழிக்கும் தமிழ்மொழி தான் முதன்மையானது என்றார்.
அதன் பிறகு பத்திரிக்கையாளர் பேச்சாளர் ஊடகவியலாளர் கவிஞர் என பண்பும் கொண்ட மனுயசுயபுத்திரன் கலந்து கொண்டு பேசினார். பழங்காலத்தில் நடந்த பொதுமைகள் பற்றிய கருத்துக்களை மாணவ மாணவிகளிடையே விரிவாக பேசினார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment