
இதனைத் தொடர்ந்து மொழிகள் ஆய்வகத்தை திறந்து வைத்து எண்ணும் எழுத்தும் பரப்புரை வாகனத்தை பள்ளிக் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குனர்கள் அறிவொளி லதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாதனூர் ஒன்றிய குழு தலைவர் சுரேஷ் குமார், நகர மன்ற தலைவர்கள் உமாபாய் சிவாஜி கணேசன்(வாணியம்பாடி) ஏஜாஸ் அஹமத்(ஆம்பூர்), நகர கழக செயலாளர்கள் ஆறுமுகம்(ஆம்பூர்), வி.எஸ்.சாரதி குமார்(வாணியம்பாடி) உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பள்ளி ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சென்னையில் இருந்து ரயில் மூலம் ஆம்பூருக்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜி, வில்வநாதன், நல்லதம்பி, நகர மன்ற தலைவர்கள் ஏஜாஸ் அஹமத், உமாபாய் சிவாஜி கணேசன், வாணியம்பாடி நகர கழக செயலாளர் வி.எஸ்.சாரதி குமார், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


No comments:
Post a Comment