திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஏழாம் தளத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையேற்றார்.
இவ்விழாவிற்கு ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் திருப்பத்தூர் நகர மன்ற துணைத் தலைவர் சபியுல்லா கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி ஆகியோர் பங்கேற்றனர்.

ஈவேரா மணியம்மையார் நினைவு ஏழை விதவை பெண்களின் மகள் திருமண திட்டம், மற்றும் டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் கலப்பு திருமண நிதி உதவி திட்டம், அன்னை தெரசா ஆதரவற்ற மகள் திருமண திட்டத்தின் மூலமாக 37 பயனாளிகளுக்கு 37 சவரன் தங்க நகை மற்றும் 16,00,000 மதிப்பினால் நிதி உதவி வழங்கப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment