திருப்பத்தூர் அருகே செல் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 April 2023

திருப்பத்தூர் அருகே செல் கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகொண்டா பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் சக்திவேல் (20) இவர் நாட்றம்பள்ளி பகுதியில் உள்ள யூனியன் யூனியன் வங்கியில் ரூபாய் 25 ஆயிரம் பணத்தை எடுத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு திருப்பத்தூர் வந்துள்ளார்.

அப்போது திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள செல் கடையில் தனது செல்போனை பழுது பார்த்துக் கொண்டிருந்த பொழுது இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மூன்று மர்ம நபர்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த ரூபாய் 25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். 


இது குறித்து திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த பணம் திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/