திருப்பத்தூர் அருகே சொத்து தகராறில் முன்னால் இராணுவ வீரருக்கு மண்டை உடைப்பு-போலீசார் வழக்கு பதியாமல் அழைகழிப்பதாக புகார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 April 2023

திருப்பத்தூர் அருகே சொத்து தகராறில் முன்னால் இராணுவ வீரருக்கு மண்டை உடைப்பு-போலீசார் வழக்கு பதியாமல் அழைகழிப்பதாக புகார்.


திருப்பத்தூர் மாவட்டம், சிம்மணபுதூர் தாதராமனூர் பகுதியை சேர்ந்தவர் லிங்க கவுண்டர். இவர் விவசாயி இவருக்கு 5 மகன்கள் உள்ளனர். இவரது தம்பி குப்பசாமி இவரது மகன் குணசேகரன்.  11 ஏக்கர் நிலத்தில் குணசேகரனுக்கு 6 ஏக்கர் நிலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து கொடுக்கப்பட்டு விட்டது. 

இந்நிலையில்  லிங்க கவுண்டர் மகன்கள் அனுபவிதிலுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் 2.5  ஏக்கர் நிலம் தனக்கு சொந்தம் என கூறி   கடந்த சில ஆண்டுகளாக தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று லிங்ககவுண்டரின் மூத்த மகன் முன்னாள் ராணுவ வீரர் காசிநாதனை குணசேகரன் அவரது மகன் முரசொலி மாறன் மற்றும்  அவருடைய மனைவி கலையரசி மூவரும் சேர்ந்து மண்வெட்டி மற்றும் கடுமையான  ஆயுதங்களால் தாக்கியதாகவும். 


அதை தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் இதுவரை திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் தன்னுடைய வழக்கை எடுக்கவில்லை விசாரிக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தார்.  தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் குணசேகரன் குடும்பத்தார் ஆபத்து உள்ளது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/