முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்தும், பாஜகவிற்கு எதிராகவும் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆம்பூர் புறவழிச்சாலையில் உள்ள ராஜீவ்காந்தி சிலையிற்கு மாலை அணிவித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து ஆம்பூர் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லக்கூடிய ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியலில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து ரயில் மறியலில் ஈடுப்பட்ட 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.


No comments:
Post a Comment