ஜோலார்பேட்டை அருகே கடன் தொல்லை காரணமாக முதல் நிலைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 April 2023

ஜோலார்பேட்டை அருகே கடன் தொல்லை காரணமாக முதல் நிலைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை. போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியில் வசிப்பவர் சென்னன் மகன் இன்பராஜ் (32). இவருக்கு கலை என்கிற பெண்ணுடன் திருமணம் ஆகி விஷ்வா (8) பவீன் (6)ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரிந்து வரும் இன்பராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பசுமை நகர் பகுதியில் தான் கட்டிய வீட்டின் மீது பாரத ஸ்டேட் வங்கியில் 24 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார்.


ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் 18 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய இன்பராஜ் பாரத ஸ்டேட் வங்கி உதவியுடன் அந்தக் கடனை அடைத்து விட்டு கூடுதலாக 6 லட்சம் ரூபாய் பணத்தை பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கியதால் கடன் தொகை 24 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.


நாளுக்கு நாள் கடன் தொகை அதிகமாகி வருவதை விரும்பாத இன்பராஜ் மன உளைச்சலுக்கு ஆளாகி அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களிடம் செத்துப் போகிறேன் என்று புலம்பி உள்ளார். இந்நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் பணி முடித்துவிட்டு காலை வீட்டிற்கு வந்த இன்பராஜ் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்ததால் இன்று மாலை 5.30 மணி அளவில் குழந்தைக்கு கட்டி வைக்கப்பட்டிருந்த தொட்டில் கயிறில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் அறிந்து விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல்துறை பிரேதத்தை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/