திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர திமுக சார்பில் நகர செயலாளர் வி.எஸ்.சாரதிகுமார் தலைமையில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி அவர்களும், திமுக தலைமைக் கழக பேச்சாளர் கீரனூர் அஷ்ரப் அலி அவர்களும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியின் இரண்டாண்டு சாதனைகள் மகளிர்களுக்கு இலவச பேருந்து, பள்ளி குழந்தை களுக்கு காலை சிற்றுண்டி, சத்துணவு பள்ளிகளுக்கு, காலை சிற்றுண்டி, வீடு இல்லாத ஏழை எளியவர்களுக்கு இலவச வீடு திட்டம் எனபல்வேறு. சாதனை களை உரையாடினர்.

இக்கூட்டத்தில் வாணியம்பாடி நகர மன்றத் தலைவர் உமாபாய் சிவாஜிகணேசன் மற்றும் நகர திமுக நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.

No comments:
Post a Comment