ஏகே மோட்டூர் பகுதியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 21 May 2023

ஏகே மோட்டூர் பகுதியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏ.கே மோட்டூர் பகுதியில் நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வரும் தூய்மை பணியை மாவட்ட ஆட்சியர் தலைவர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். இயற்கை அறக்கட்டளை மற்றும் ஏகே மோட்டூர் ஊராட்சி சார்பாக மரக்கன்று நடுதல் விதைப்பந்து வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதி மொழியை ஏற்றனர்.

அதன்பின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் கலந்து கொண்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு மஞ்சப்பை கொடுத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். அந்த உறுதி மொழியில் ஒரு முறையை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் இந்த தகவல்களை வீட்டிலும் உறவினர்களிடமும் நண்பர்களிடம் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் 



மழை நீரை பூமிக்குள் செல்ல தடையாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சீர்மிகு தமிழ்நாட்டை உருவாக்குவேன் எனவும் உறுதி கூறுகிறேன் என உறுதிமொழியை ஏற்றனர்.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, அரசு அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் வேலு இயற்கை மீட்பு அறக்கட்டளை,நம் மக்களின் குரல் அறக்கட்டளை, ஏணிப்படிகள்  அறக்கட்டளை உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/