மண்டல வாடி அடுத்த கவுண்டப்பனுர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு- மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு- கிராம பூசாரி சாமி ஆடியதால் பரபரப்பு - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 May 2023

மண்டல வாடி அடுத்த கவுண்டப்பனுர் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடை திறப்பு- மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு- கிராம பூசாரி சாமி ஆடியதால் பரபரப்பு


திருப்பத்தூர் மாவட்டம் சின்ன பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில்  உள்ள குன்னத்தூர் கடையிலிருந்து பிரித்து கவுண்டப்பனூர் பகுதி நேர நியாய விலை கடையை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவக்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் பொதுமக்களின்  நலன் கருதி திருப்பத்தூர் மாவட்டத்தில் மே 2021க்கு பிறகு இதுவரை 49 புதிய நியாய விலை கடைகளை திறக்கப்பட்டுள்ளது.  

தமிழ்நாட்டிலேயே பயோமெட்ரிக் முறையில் விநியோகம் செய்வதில் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2023 வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதிலும் திருப்பத்தூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது மே 2023 மாதம் முதல் திருப்பத்தூர் மாவட்டத்தில் செரி ஊட்டப்பட்ட அரிசி நியாய விலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது என்றும் பேசினார்.  


இந்த செரிவூட்டப்பட்ட அரிசி ஆனது பொது மக்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது என்றும் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படுவதை தடுக்கும் என்றும் பேசினார்.   


முக்கியமாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வைக்கிறது, இந்த செரிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோவிற்கு ஒரு கிலோ என்ற விதிக்கத்தில் சேர்க்கப்படுகிறது, இந்நிகழ்ச்சியில் கிராம பூசாரி ஒருவர் திடீரென சாமி ஆடியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/