திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் புதூர்நாடுமலை ஆரம்ப சுகாதார நிலைய அருகேயுள்ள கோயில் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சயில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி முன்னிலையில் பசுமை தாய்நாடு அறக்கட்டளையின் சார்பில் 150 பழங்குடியினர் மக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்கள்.
உடன் மகளிர் திட்ட இயக்குநர் ரேணுகாதேவி, வேளாண்மை இணை இயக்குநர் பாலா, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பிரசன்னகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இராஜன், இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் அரவிந்த்குமார், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ மாவட்ட மேலாளர் இராஜஸ்ரீ, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.


No comments:
Post a Comment