திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தொழுகையில் 5000ற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி சிறப்பு தொழுகை நடத்தினர்.


தொழுகை முடிந்து பின்னர் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி தியாக திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். அனைவரிடமும் சகோதரதுவத்துடனும், பகைமை இன்றி அனைவரிடமும் அன்பாய் இருக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் தொழுகைக்கு பின் கட்டி அழைப்பது வழக்கம்.
இதனை தொடர்ந்து இசுலாமியர்கள் மூன்று நாட்களுக்கு ஆடு, மாடு குர்பானி செய்து அதில் மூன்று பங்குகளாக பங்கிட்டு ஒரு பங்கினை அவர்களுக்கும், ஒரு பங்கினை நண்பர்களுக்கும், ஒரு பங்கினை ஏழை எளிய மக்களுக்கு பங்கிட்டு கொடுப்பது வழக்கமாக கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment