போதை பொருட்கள் உபயோகித்தால் ஏற்படும் தீமைகள் குறிக்கும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மதுபானங்கள் மரணத்தை ஏற்படுத்தும், கண்பார்வை இழக்கும், பசியின்றி உடல் நலம் குறையும்,நரம்பு தளர்ச்சி ஏற்படும் உடல் உறுப்புகள் செயலிழக்கும்,நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்தும் உள்ளிட்ட தீமைகள் ஏற்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் பற்றி 24 மணி நேரமும் புகார் தெரிவிக்க 10581 கட்டணமில்லா தொலைபேசி எண் கலை நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள கடைக்காரர்களுக்கு போதை விழிப்புணர்வு குறித்து துண்டு பிரச்சுரங்களை அதிகாரிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் திருப்பத்தூர் நகர வருவாய் அலுவலர் வேணுகோபால் திருப்பத்தூர் நகர கிராம நிர்வாக அலுவலர் சூர்யா மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment