திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாள் ஆல்பர்ட் ஜான் வழிகாட்டுதலின் பேரில் 18.06.2023 அன்று திருப்பத்தூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமலேரிமுத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.


அப்போது மாடப்பள்ளியை சேர்ந்த 21 வயதுடைய பாலாஜி என்ற நபரின் வாகனத்தை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் அவர் ஓட்டி வந்த வாகனம் திருட்டு வாகனம் என கண்டறியப்பட்டு அவரை விசாரணை செய்ததில் கந்திலி, குருசிலாப்பட்டு போன்ற இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது.
மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட 14 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இச்சிறப்பான செயல் செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.
- ஆம்பூர் தாலுக்கா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.
No comments:
Post a Comment