திருப்பத்தூர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ்- மக்கள் சங்கம், ஜவ்வாது மலை, ஏலகிரி மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாநில தழுவிய கண்ணன் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 June 2023

திருப்பத்தூர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மலைவாழ்- மக்கள் சங்கம், ஜவ்வாது மலை, ஏலகிரி மலைவாழ் மக்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாநில தழுவிய கண்ணன் ஆர்ப்பாட்டம்.


திருப்பத்தூர் மாவட்ட சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் ஜவ்வாது மலை ஏலகிரி மலைவாழ் மக்கள் தொகை இணைந்து நடத்தும் மாநிலத் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் மாநில  தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.   

இந்த ஆர்ப்பாட்டத்தில் 2006 வன உரிமை சட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.  நிலுவையில் உள்ள  மனுக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கிடும்  வழங்க வேண்டும். சொந்த வீடு இல்லாத பழங்குடி மக்களுக்கு அரசே வீடு கட்டிதர வேண்டும். வன பாதுகாப்பு திருத்த சட்டம் 1980 திரும்பத் பெறு. விளாங்குப்பம், நம்முடைய கோரிக்கைகள் கொத்தனூர் கிராமத்திற்கும்,  மக்கள் சங்கம் அவர்களுக்கு தார் சாலை அமைத்திடு.  


ஜவ்வாது மலையில் அனுபவத்தில் உள்ள நிலங்களுக்கு ஜேசிபி எந்திரம் வைத்து ஏர் உழுவதற்கும் சமப்படுத்துவதற்கும் ஏலகிரி மலையில் உள்ள கிராமங்களுக்கு 2006 வன  மசோதா சட்டத்தின் படி மலைவாழ் மக்களுக்கு அனுபவ நிலங்களுக்கும்  வீடுகளுக்கும் பட்டா வழங்கிடு. 


மலைவாழ் மக்களுக்கு தாமதம் இல்லாமல் சாதி சான்றிதழ் வழங்கிவழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விவசாய சங்க தலைவர் சக்திவேல்,  விவசாய சங்க தாலுக்கா செயலாளர் காமராஜ்,  மற்றும் கட்சி தொண்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/