இந்நிலையில் செந்தில் குமார் பொய்யான ஆவணங்களை தாயார் செய்து டிராக்டர்களை வாங்கியதாக கூறி செல்வகணபதி டிரேடர்ஸின் பங்குதாரர்களாக உள்ள திருப்பத்தூர் பாமக மாவட்ட செயலாளர் சிவா என்பவர் செந்தில் குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.


இதில் வாக்குவாதம் முற்றிபோக செந்தில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவாவின் கார் கண்ணாடியை கற்களால் உடைத்துள்ளனர், இதனை தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை உடனடியாக கைது செய்யக்கோரி சிவா மற்றும் பாமகவை சேர்ந்த அவரது ஆதரவாளர்கள் வாணியம்பாடி - ஆலங்காயம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில்ஈடுப்பட்டு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு பாமகவினர் கலைந்து சென்றனர்.
மேலும் செந்தில் குமார் மற்றும் சிவா ஆகிய இருவரு தரப்பினரின் புகாரை ஏற்று ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment