இவரது தம்பி செந்தில்குமார் என்பவரிடம் சின்னபள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்த அசோக் மகன் அஜித் என்பவரிடம் தாட்கோ மூலம் மானியம் பெற்ற டிராக்டரை அடமானம் வைத்துள்ளார், அஜித் என்பவர் டிராக்டருக்கு முறையாக லோன் கட்டாததால் டிராக்டர் ஷோரூம் உரிமையாளர் வைரமுத்து என்பவர் திருப்பத்தூர் பாமக மேற்கு மாவட்ட செயலாளர் சிவா என்பவருடன் அவருடைய ஆதரவாளர்களை அழைத்து சென்று நேற்று பணத்தை கட்ட சொல்லி தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.


அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதில் பாமக மாவட்ட செயலாளர் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது, இதனால் வாணியம்பாடியிலிருந்து அலங்காரம் செல்லும் சாலையில் பாமக கட்சியினர் வீனோத்குமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோரை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு வீனோத்குமாரை போலீசார் அழைத்து சென்ற நிலையில் அவரது தம்பி செந்தில்குமார் தலைமறைவு ஆகி உள்ளார். இதனையடுத்து நேற்று இரவு விசாரணை என்ற பெயரில் வாணியம்பாடி டிஎஸ்பி விஜகுமார், வாணியம்பாடி நகர காவல் நிலையம் ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் ஆலங்காயம் காவல் நிலையத்திற்கு சென்று வீனோத்குமாரை காவல் நிலையத்திலே நிர்வாணம் படுத்தி மின்சாரம் துண்டித்து லத்தியால் சராமரியாக தாக்கி உள்ளனர்.
இதில் பலத்த படுகாயம் அடைந்த வினோத்குமாரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே வினோத்குமார் இருதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மாவட்ட இளைஞர் அணி துணைத்தலைவரான வீனோத்குமாரை டிஎஸ்பி,காவல் ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் போலீஸ் ஸ்டேஷனிலே நிர்வாணமானம் படுத்தி சராமரியாக அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment