திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கௌதமபேட்டை அருகே உள்ள மஞ்சள் குடோனில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அவ்வப்போது ஆய்வு செய்வது வழக்கம். அதேபோல் இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதா அல்லது சரியாக உள்ளதா என ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினர், கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.



No comments:
Post a Comment