பொம்பிகுப்பம் பகுதியில் திமுக பிரமுகர் ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களை அவதூறாக பேசியதால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 July 2023

பொம்பிகுப்பம் பகுதியில் திமுக பிரமுகர் ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களை அவதூறாக பேசியதால் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் பொம்மி குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக தேன்மொழி வெங்கடேசன் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த அதே பகுதியைச் சேர்ந்த சாமு என்பவர் திமுகவை சார்ந்தவர். 

இவர் திமுக ஒன்றிய மாணவரணி அமைப்பாளராக உள்ளார். இவர் வீடு பொம்பிகுப்பம் பகுதியில் உள்ளது. இவர் ஆக்கிரமிப்பு செய்ததை ஊராட்சி நிர்வாகம் அப்புறபடுத்தியதாக கூறப்படுகிறது. இவர் நேற்று இரவு பழைய அத்திகுப்பம் பகுதிக்கு சென்றவர்  அங்குள்ள பெண்களை கீழ்த்தரமான வார்த்தைகளாலும் அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. 


அதனால் ஆத்திரமடைந்த இவர் குடிபோதையில் பெண்களை ஆபாச வார்த்தை களாலும், சாதியை சொல்லி கேவலமாக பேசியதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என திருப்பத்தூர் செல்லும் சாலையில் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டம் நடைப்பெற்று வருகிறது.  


ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சாமு மன்னிப்பு கோரினார். அதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/