இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு குடித்துவிட்டு மனைவி மற்றும் தந்தையையும் அடித்து உதைத்ததாக தெரிகிறது, மேலும் திரும்பவும் விடியற்காலை 4 மணி அளவில் குடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசிகுமாரின் தந்தை சுப்பிரமணி மற்றும் மனைவி லட்சுமி ஆகிய இருவரும் சேர்ந்து வாழை வெட்டும் கத்தியால் சசிகுமாரின் வாய்மீது வெட்டியுள்ளார் இதனால் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.


பின்னர் மனைவி லட்சுமி சசிகுமாரின் கைகால்களை அழுத்தி பிடிக்க தந்தை சுப்பிரமணி சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளார். பின்னர் இதனை அறிந்த நாட்றம்பள்ளி உதவி காவல் ஆய்வாளர் முனி ரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடலை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து லட்சுமி மற்றும் சுப்பிரமணியை திம்மாம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடி போதையில் இருந்த மகனை தந்தை மற்றும் மனைவி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment