நாட்றம்பள்ளி அருகே சாலையில் பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதிய விபத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த 7 பெண்கள் உயிரிழப்பு, 14 பேர் படுகாயம்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 45 பேர் கடந்த 8 ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சாலாவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை அனைவரும் சுற்றுல்லாவை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்த போது நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுல்லா சென்ற வேன் பஞ்சராகியுள்ளது.
இதனை தொடர்ந்து வேன் ஓட்டுநர் வேனை சாலையிலேயே நிறுத்தியிருந்த நிலையில் வேனில் இருந்தவர்கள் சாலையிலேயே நின்று கொண்டிருந்துள்ளனர்..
அப்பொழுது அதே சாலையில் வேகமாக வந்த லாரி பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியுள்ளது, இதனை தொடர்ந்து சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி எதிர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 14 பேரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து இவ்விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இவ்விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்..
நாட்றம்பள்ளி செய்தியாளர் கோபிநாத்.
No comments:
Post a Comment