திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அங்கன்வாடி மையங்களில் வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் 19.09.2023 முதல் 25.09.2023 வரை நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் முதல் நாளான இன்று ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் மரு.ச.பசுபதி அவர்கள் பெருமாள்பேட்டை, கொத்தக்கோட்டை, நிம்மியம்பட்டு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட தொற்றுநோயியலாளர், மாவட்ட உதவி திட்ட மேலாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment