திருப்பத்தூர் அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் அரசு மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 September 2023

திருப்பத்தூர் அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் அரசு மாணவியர் விடுதியை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.


திருப்பத்தூர்  மாவட்டம், கெஜல்நாயக்கன்பட்டி தனியார் கட்டிடத்தில் அரசு பழங்குடி மாணவியருக்குக்கான விடுதியை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பழங்குடி நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் ஜெயக்குமார், மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். 

அதனை தொடர்ந்து திருவள்ளுவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதியதாக தொடங்கிய பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். இந்த தமிழ்நாடு தேர்வாணய இலவச பயிற்சி வகுப்பானது பழங்குடி மாணவ, மாணவிகள் என 140 பேருக்கு பயிற்ச்சி அளிக்கப்படுகிறது. பழங்குடி மாணவர்கள் ஆதிதிராவிடர் மாணவர்கள் மற்றும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இலவச பயிற்சி  அளிக்கப்படுகிறது.  


இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் கல்லூரியின் முதல்வர் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/